பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/239

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்தியா என்றால், இங்கு இருப்பவர்கள் இந்தி பேசும் வடநாட்டவரும், ஆரியத்தமிழ் பேசும் பார்ப்பனருந்தாமா?

வேறு இனத்தவரே இங்கு இல்லையா?
தொலைக்காட்சியில் தில்லுமுல்லுக் கருத்துப் பரப்புதல்கள்!
தேசியம் என்றாலே இந்தியும் வடநாட்டுக்காரனுந்தாமா?

தொலைக்காட்சி நிலையத்தில் மானமுள்ள தமிழர் ஒருவருமில்லையா?
போராடிச் சாவதுதானே!

தொலைக்காட்சித் துறையின் அழிம்புகளும் கொடுமைகளும்!

ர வர தொலைக்காட்சித் துறையினரின் அழிம்புகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் ஒர் அளவே இல்லாமல் போய்விட்டது. தேசிய நிகழ்ச்சிகள் என்னும் பெயரால், இந்தி கொடி கட்டிப் பறக்கிறது. தேசியத்தின் பெயரால், வடநாட்டினரின் இந்துப் பண்பாட்டுக்கே வலை விரிக்கப்படுகிறது. ஒருமைப்பாட்டின் பெயரால், இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனத்தினரையும், இந்தி, இந்துமதம், இவற்றை ஒப்புக்கொள்ளும் இந்திரா கட்சித் தொண்டர்களாக மாற்றி, ஒரியன்மைப் படுத்தும் முயற்சியில், நடுவணரசின் செய்தித்துறை படுவேகமாகவும், வஞ்சகமாகவும், சூழ்ச்சியாகவும் செயல்பட்டு வருகிறது. எந்த வகையான மக்கள் எதிர்ப்பையும் அவர்கள் காதில் போட்டுக் கொள்வதே இல்லை.