ஆரியர் - திராவிடர் பூசலைத் தொலைக்காட்சி இராமாயண நாடகத்தில் பாருங்கள்!
இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் பல தேசிய இனங்கள் இருக்கின்றன என்றாலும், அவை அனைத்தும் ஆரியம், திராவிடம் என்னும் இரண்டு பேரினங்களுள் அடங்குபவை ஆகும். இவற்றுள் நம் தமிழ்த் தேசிய இனம் என்பது திராவிடப் பேரினத்துள் அடங்குவதாகும். இத்துடன் இந்தியாவிலுள்ள மற்ற இருபத்து மூன்று இனங்களும் இதில் அடங்கும்.
இந்திய நாடு விடுதலை பெற்றுப் பேராயக்கட்சி ஆட்சிக்கு வந்ததும், அந்த ஆட்சியை வடநாட்டு முதலாளிகளும் ஆரியப் பார்ப்பனர்களும் கைப்பற்றிக்கொண்டு, பிற அனைத்து இனங்களின் உட்கூறுகளையும் சிதைத்து வருவதோடன்றி, இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்னும் பெயரில், ஆரியப் பார்ப்பனிய மரபுகளையும், இந்துமதக் கோட்பாடுகளையுமே முகாமைப்படுத்தி வளர்த்தெடுக்கத் தொடங்கினர். இதற்குத் துணையாக, பிற இனக் கூறுகளைளத் தம் ஆரியமரபுக் கூறுகளுடன் உட்கவர்ந்துகொண்டு அனைத்துச் சிறப்பியல்களுக்கும் தாமே கட்டியங்கூறி உரிமை கொண்டாடித் தம் போலிப் பெருமைகளைக் கரவாக உலகெலாம் தெரியப்படுத்தி வருகின்றனர்.
இவற்றுக்கிடையில், ஆரிய - திராவிட மரபுகளை, இல்லை வரலாற்றை மாற்றி எழுதி - உரைத்து - எதிர்கால