பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

259


இல்லை. தி.மு.க. தலைவர்களுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டபோது “ஆகா சரியான தீர்ப்பு” என்று யாரும் ஏற்றுக்கொள்ளவும் (ஆமோதிக்கவும்) இல்லை; ஐயையோ, ஞாயமில்லை (அநியாயம்) என்று யாரும் குமுறவுமில்லை. பொதுமக்கள் அதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை!’ - என்றெழுதுகிறது. இந்தப் பார்ப்பன ‘சாகிபு’ மூளை! என்னே அந்த மூளையின் வல்லடி வழக்கு, பார்த்தீர்களா?

இந்த ஒரே ஆள் போதும், இவருடைய பார்ப்பன இனத்தைக் கட்டிக் காக்க, நம்மவரில் எவனுக்கும் இந்தச் சூடும் சுரனையும் இல்லை, எவர், எது, எக்கேடு கெட்டுப் போனால் எமக்கென்ன என்றுதானே நாம் அனைவருமே இருக்கிறோம்!

பொதுமக்கள் இப்போராட்டத்தில் பெரிதாக அக்கறை காட்டவில்லையாம்! சோ சொல்கிறது. இன்னும் மக்களை யெல்லாம் சூத்திரர்களாகவே மதிக்கும் புராண, இதிகாசக் காலத்திலேயே இருப்பதாக இது நினைக்கிறதோ, என்னவோ? இவர் கூறும் பொது மக்கள் என்பவர்களில் சிறைக் குப் போன இருபத்தையாயிரம் பேர்களும் அடங்க மாட்டார்களோ? இல்லை, இவர் மதிப்பிடும் பொதுமக்கள் சீனாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ, அல்லது உருசியாவிலிருந்தோ வந்து, இங்குக் குடியேறி வாழ்ந்து கொண்டிருப்பவர்களோ, இல்லை, பொதுமக்கள் என்பவர்கள் இவரைப் போல இங்கு வந்து வாழும் ஆரிய நாடோடிக் கெள பாய்களோ? சிறைக்குப் போனவர்களைப் பார்த்தால், (அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கட்டுமே!) அவர்கள் பொதுமக்கள் ஆகமாட்டார்களோ ? பொதுத் தேர்தல் என்பது இவர்களுக்கு இல்லையோ? இவர்களுக்கு ஒப்போலை உரிமை என்பது இல்லையோ? இவர் மொழுக்கை மண்டையில் உள்ள இரண்டு முட்டைக் கண்களுக்குத் தி.மு.க.வினரையோ, தமிழர் பிறரையோ பார்த்தால் மட்டும் ஏன் பொதுமக்களாகத் தெரிவதில்லை. இவர்கள் பூ(!) தேவர்கள் என்பதாலா?

இந்த அக்கரகாரத்து வாண்டு இன்னும் சொல்கிறது, கேளுங்கள்!

‘முன்பெல்லாம் இம்மாதிரி நடந்திருந்தால், தமிழகத்தில் ஒரு பெருங்கூட்டம் தி.மு.க.வினரின் ஈகத்தை(தியாகத்தை)யும், வீரத்தையும் மெச்சியிருக்கும். மற்றொரு பெரிய கூட்டம் ம.கோ. இராவின்(எம்.சி.ஆரின்) அரச (ராஜ) தந்திரத்தையும், உறுதி மிக்க