பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/282

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

வந்து வாய்த்த கடைசி ஆரிய எதிரியாக இருக்க முடியும். அதுபோல் வாழப்பாடி இராமமூர்த்தி தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கடைசி வீடணனாகவும் இருக்கலாம். இனிமேல் இத்தகைய பகைவர்களும் உட்பகைவர்களும் தோன்றாமல் தமிழினத்தை விழிப்படைச் செய்யும் முயற்சியைத் தமிழின நலங்கருதும் அறிஞர்களும், இளைஞர்களும் விடாமுயற்சியுடனும் ஊக்கத்துடனும் நம்பிக்கையுடனும் செய்துவர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இனி, அடுத்து வரும் இந்தியத் தேர்தல்களில் தமிழினத்தவர்கள் பங்கு கொள்ளத் தேவையில்லாதபடி, இங்குத் தமிழக விடுதலை முயற்சிகள் காட்டுத் தீயெனக் கனன்று பரவி எதிரிகளைக் கட்டோடு முறியடித்தல் வேண்டும். அவ்வாறான நிலையில், தப்பித் தவறி இன்னொரு தேர்தலை இத் தமிழ்நாட்டிலும் நடத்துவதற்கு வடநாட்டாரும் பார்ப்பனரும் இங்குள்ள வீடனர்களும் முயற்சி செய்வார்களானால் அது, தமிழினத்தின் உரிமைப் போராட்டமாகவே முகிழ்க்க வேண்டும் எனத் தன்மானத் தமிழர்கள் உறுதிகொள்ள வேண்டும் என்பதை அனைவரும் நெஞ்சில் நிறுத்துக.

- தமிழ்நிலம், இதழ் எண். 145, 1991