பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/288

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

அந்த முட்டாள் மருத்துவர்கள் மக்களின் வெறும் உயிர்களைக் காக்க உழைக்கிறார்களாம். அவர்களுக்கு அந்த வேதத்தெய்வங்கள் தங்கள் பாத மலர்களை அவர்கள் கட்டியுள்ள மருத்துவமனையில் கொண்டுவந்து வைத்து அருளாசி வழங்குகிறார்களாம்! என்ன கயவாளித்தனம்!

நன்றாகப் படித்துப் பட்டம் பெற்ற இந்த மருத்துவர்களே, தங்கள் அறிவுத் திறனை, அந்த ஊசை உளறுவாய்ப் பார்ப்பான்களுக்கு அடகு வைத்தால், இவர்களிடம் மருத்துவம் பார்க்க வரும் அறியாமை மிக்க நோயாளிப் பொதுமக்கள் என்ன செய்வார்கள்? அப் பார்ப்பன ஏமாற்றுக்காரர்களை இன்னும் மேலாகவன்றோ எண்ணுவார்கள்! நம்புவார்கள்!

இம்மாதிரி ஏமாற்றுகள் இவ்வறிவியல் காலத்திலேயே நடந்தால், பழங்காலங்களில் எவ்வெவ் வகையில் பொதுமக்கள் ஏமாற்றப் பட்டிருக்க மாட்டார்கள்! எண்ணிப் பாருங்கள்!

‘பார்ப்பான் நம் தெய்வம்’ (பிராமணா மம தெய்வதம்) என்னும் மூட நம்பிக்கையை - ஏமாற்றை - மக்களிடம் மேலும் மேலும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அனைத்துப் பார்ப்பனரின் கொள்கையாகும் - கோட்பாடாகும் - ஆசையாகும்!

இனி, இதுபோலும் எத்துகள், ஏமாற்றுகள், பார்ப்பனக் குறும்புகள் எல்லாம் செயலலிதா முதலமைச்சரான பின்னர்தாம் படிப்படியாக - நாளுக்கு நாள் - மிகமிக வளர்ந்து வருகின்றன என்பதை அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும்.

செயலலிதா, கச்சத்தீவு மீட்புத் தோல்விக் கிடையில், காவிரி நீர் மீட்புப் பின்வாங்கலுக்கிடையில், தம் வாய்விழ்த்துக் கொடுத்த பல்வேறு உறுதிகளையும் மறக்கடிக்கின்ற வகையில், மாமக நிகழ்ச்சியை மிகவும் பெரிதுபடுத்தி, அரசு விழாப் போல் கொண்டாடியும் அதில் தாம் போய் இருபத்தொரு வெள்ளிக் குடங்களின் நீரில் குளித்தும் பெரு விளம்பரமும் பெரிய திசை திருப்பமும் செய்து கொண்டார். இவர் மாம்கத்தை முன்வைத்து நடத்திய அரசியல்கத்தாட்டத்தையும், பெற்றுக்கொண்ட திரைப் படப்பாணி விளம்பர் வேடிக்கைளையும், அவற்றுக்கு ஏற்பட்ட மக்கள் வரிப்பணித்தால் ஆண செலவுகளையும், இவர் கூத்தடிப்பால் நேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், எதிர்கால மாமக நிகழ்ச்சிகள் அனைத்திலும் நினைவு கூர்கின்ற வண்ணம்