பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

287


நடத்திவிட்டார். இத்தனை உயிர்கள் இறந்திருக்கின்ற வேளையிலும் (எத்தனை ஆயிரம் பேர் செத்திருந்தாலும் செயலலிதாவின் விளம்பர வெறி அடங்காது. பாலியல் வெறியின் மறுவடிவம், அது!) மிகத் தந்தரமாகத் தம் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்னும் விளம்பர அறிவிப்பு (அவ்வகை அறிவிப்பும் விளம்பரத்திற்காகவே!) செய்தும், முட்டாள் அமைச்சர்கள் இருவரையும் மூடப் பெண்கள் ஐநூற்றுக்கு மேற்பட்டவர்களையும் தம் உருவத்தை அவர்கள் கைகளில் பச்சைகுத்தச் செய்தும், வேறு சில அன்பளிப்பு உத்திகளைக் கையாண்டும் தம் பிறந்தநாள் செய்தியை இந்தியா முழுவதும் பரப்பிவிட்டார்; நிகழ்ச்சியையும் அவர் கூறியதற்கு மாறாகவே மிக அமர்க்களமாகவே கொண்டாடச் செய்துவிட்டார்.

எஃது எப்படியிருப்பினும் கண்ணுக்கு முன்னால், தெய்வீகம் என்னும் பெயரில் அறிவுக்கே பொருந்தாத வகையில் மூடநம்பிக்கைகள் பல நடைபெறுகின்றன. அவ் வகையில் இலக்கக் கணக்கான மக்கள் அதிகாரக்காரர்களால் படித்த மூடநம்பிக்கைப் பார்ப்பன வல்லாண்மைச் சாதியினரால் ஏமாற்றப்படுகின்றார்கள், சுரண்டப்படுகின்றார்கள்! இவற்றுக்கு முடிவுதான் என்ன?

இந்தியாவில் அறிவியல் வளர வேண்டும் என்று மெப்புக்கு முதலைக்கண்ணிர் விடும் பார்ப்பனக் குடியரசுத் தலைவர் வெங்கட்டராமனும், வஞ்சகமே நிறைந்த தலைமை யமைச்சர் நரசிம்மராவுந்தாம் இதற்கு விடைசொல்ல வேண்டும்.

- தமிழ்நிலம், இதழ் எண் : 152, 1992