பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

295


இவர்கள், இக்கால் பலவாறான மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் தங்களின் பகுத்தறிவையே இழந்து விட்டிருக்கின்றனர். தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்து வேறு. வேறு மொழிகளைக் கற்பவர்களாகவும், தங்கள் இனத்தவரையே பகைப்பவர்களாகவும், வெறுப்பவர்களாகவும், காட்டிக்கொடுத்து உயிர் வாழ்கிறவர்களாகவும் இருந்து வருகின்றனர். இவர்களின் மூடநம்பிக்கைகளுக்கு அளவில்லை.

மலையை ஒருவன் தூக்குவது! மணலைக் கயிறாகத் திரிப்பது: வானத்தைத் துணிபோல் மடித்து வைப்பது, நில உருண்டையைப் பாயர்கச் சுருட்டுவது! பனை மரத்தைப் பிடுங்கி ஒருவன் பல் துலக்குவது! ஒருவன் ஒரே அம்பினால் ஒரு மரத்தின் இலைகள் அத்தனையையும் ஒட்டை விழும்படி செய்வது! இவ்வுலகில் உள்ள, ஒரு கடல் நீர் அனைத்தும் பாலாக இருப்பது! அதில் ஒரு மலையை நிலைநாட்டிப் பாம்பை ஒரு கயிறாகக் கொண்டு மத்துபோல் கடைவது! வெள்ளை யானை ஒன்று இறகு முளைத்துப் பறப்பது பாம்பின், தலைமேல் ஒருவன் நின்று நாட்டியம் ஆடுவது! பெரிய பாம்பைப் பாயாகக் கொண்டு ஒரு தெய்வக் கணவனும் அவன் மனைவியும் படுத்துக்கொண்டு இருப்பது! பிரம்மன் என்பவன் நான்கு முகங்களோடு. இருந்துகொண்டு உயிர்களைச் சட்டிபானைகள் செய்வது போல் செய்து உலகில் உயிர் வாழவிடுவது! அவன் நாக்கில் அவன் மனைவி வாழ்வது! ஒருவன் தன் குடுமியிலேயே தன் இரண்டாம் மனைவியைப் பொதிந்து வைத்திருப்பது! நெருப்புமழை பொழிவது வானத்தில் தேர் ஓட்டுவது! பல பேர் மாட்டுக்கும், குதிரைக்கும், குரங்குக்கும், மீனுக்கும், கரடிக்கும் பிறப்பது! அரசன் மனைவிகள் குதிரையைச் சேர்ந்து குழந்தைகள் பெறுவது! ஒரு மண் குடத்திலிருந்து ஒருவன் பிறப்பது! ஒரு குதிரையின் மூக்கிலிருந்து இன்னொருவன் பிறப்பது! வானத்தில் மாளிகை கட்டுவது! மாடு இறக்கை வைத்துக்கொண்டு வானில் பறப்பது! நிலம் வெடித்து அதிலிருந்து குழந்தை பிறப்பது! தேரின் அச்சாணிக்குப் பகரமாக ஒருத்தி தன் விரலை வைத்துக்கொண்டு தேரை ஒட்டுவது நெருப்புக் குண்டத்திலிருந்து குழந்தைகள் பிறப்பது! உடம்பின் அழுக்குகளைத் திரளையாகத் திரட்டி அதிலிருந்து குழந்தை செய்வது! அக்குழந்தையினுடைய தலையை வெட்டிவிட்டு, அதற்குப் பகரமாக யானைத்தலையை வெட்டி அக் குழந்தையின் கழுத்தில் ஒட்டவைப்பது! மணலில் பானை செய்து அதில் தண்ணிர் எடுத்துவருவது! ஒர் ஆளின் வாய் வழியாக ஒருவன் வயிற்றுக்குள் புகுந்து, அதைக் கிழித்துக் கொண்டு வெளியேவருவது! நிலாவைப் பாம்பு விழுங்குவது! கதிரவனைப் பாம்பு