பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

51


கருதிப் பேசிக் கொண்டிருக்கும் பேதைமையை என்னென்பது!

வழக்கறிஞர் படிப்புப் படித்துவிட்டு, நடுவணரசில் ஒர் அமைச்சனாகிவிட்டால், உலகத்து அறிவெல் லாம் தன் மூளையிலேயே ஏறிவிட்டது என்று எண்ணித் தனக்குத் தொடர்பில்லாத் துறைகளிலும் வாய்வைத்துக் கருத்தறிவிக்கும் அக்குயக்கொண்டான் தனத்தை இன்னும் எவ்வாறு சூடேறும்படி சுட்டிக்காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

பார்ப்பனர்கள் தமிழ்மொழி யழிவையே சமசுக்கிருத மொழியின் வளர்ச்சியாகக் கருதியிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் இனம் வெளியிடுகின்ற இதழ்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு படியை எடுத்து ஒரு சேரத் தொகுத்துப் பார்த்தாலே போதும்; நன்கு விளங்கும். அடிமை உள்ளந் தவிர நடுநிலையான எந்த உள்ளமும் அச்சூழ்ச்சியை நன்கு உணரமுடியும்,

எந்தத் துறையில் ஈடுபட்டாலும் சரி, பார்ப்பனர்க்குத் தமிழ் மேல் ஒரு வெறுப்புணர்ச்சியும், தமிழர்மேல் ஒரு பகையுணர்ச்சியும் கட்டாயம் இருந்தே வருவதைக் கண்டு வருந்தாமல் இருக்க முடியாது, மாந்தன் நிலாக்கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் சென்று கொண்டிருக்கின்ற இவ்விருபதாம் நூற்றாண்டின் இறுதியிலுங் கூட, அவர்கள் அத்தகைய உணர்ச்சிகளைக் கொண்டிருக்கிறார்க ளென்றால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்களின் போக்கு தமிழ்க் குமுகாயத்திற்கே எப்படி மாறுபட்டு இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவும் முடியாது.

தமிழ்த்துறையில் அவர்களின் கைவரிசை மறைமுகமாகவே காட்டப்பெற்றது. தமிழை வளர்ப்பது போலும் தமிழ்மேல் பற்றுக் கொண்டிருப்பது போலும் அவர்கள் வெளிப்படையாக ஈடுபட்டாலும், மறைமுகமாக அவாக்ள் இனத்துக்கும் மொழிக்குமே ஏற்றந் தந்து எழுதியிருக்கின்றனர்; பாடியிருக்கின்றனர். அந்நிலையில் பெரும் புலவர்களாக விளங்கிய பர், உ.வே. சாமிநாதர் அவர்களையும் பரிதிமாற் கலைஞர் அவர்களையும் ஒருசில எடுத்துக்காட்டுகளால் பார்த்தோம். அவற்றிலிருந்து அவர்களின் உள்ளக் கிடக்கைகள் எவ்வாறு தமிழ்க்கும் தமிழர்க்கும் மாறுபட்டு விளங்கியிருந்தன என்பது காட்டப் பெற்றது.

பார்ப்பனர் என்பதற்காகவே
அளவிறந்த போற்றுறதல்!

இனி, பாட்டுத்துறையில், பாரதியார் ஒரு பார்ப்பனர்