பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆரியக் குறும்பு!

மிழர்கள் அறியாமையில் மிகுந்திருந்த காலத்திலும், இரக்க உணர்வாலும் கொடைமடத்தாலும் தம்மை அண்டினார் எவராயினும் அவரைக் கரவின்றிப் புரந்து வந்த காலத்திலும், பிராமணர்கள் என்னும் ஆரியப் பார்ப்பனர் தம் பிழைப்புக்காகவும் மேம்பாட்டுக்கு ஆகவும், பொய்யும் புனைகருட்டும் மிடைந்த கதைகளையும், போலி வழக்கங்களையும் புகுத்தி மன, அறிவு, மெய்களால் தமிழரைத் தாழ்த்தி அவர்தம் நலன்களை உழைக்காமலேயே உண்டுவந்தனர் என்பதற்கு வரலாற்று வழியாகவும் வாய்வழிச் செய்தியாகவும் பல சான்றுகள் உள. அத்தகைய ஏமாற்று வேலைகளை ஆரியப் பார்ப்பனர்கள், இவ் விருபதாம் நூற்றாண்டுக் காலத்திலும் கைவிடவில்லை என்பதற்கு இன்று உள்ளுரவும் வெளிப்படையாகவும் நிகழ்ந்துவரும் நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக உள்ளன.

பார்ப்பனர்களின் கைக்கேடயங்களாக இன்று விளங்கி வருபவை அவர்கள் நடத்திவரும் செய்தித்தாள்கள், அவர்கள் மேலாண்மை செய்து வரும் வானொலி நிலையங்கள், அரசினர் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் முதலியவை. இவற்றின் வழியாக அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழர்க்கும் செய்துவரும் கேடுகள் கணக்கிலடங்காதவை. இவற்றைப் பற்றி எண்ணிப்பார்க்கவும் இடம் வைக்காமல் அவர்கள் விடாது செய்துவரும் மடமைப் பெர்ழிவுகளும், வெளியீடுகளும், நடைமுறைகளும் எதிர்காலத்தில் தமிழ்மொழியையே - தமிழர்களையே அழித்துவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.