பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பொது மக்களுக்குத் தெரிந்த - மிகவும் புழக்கத்திலுள்ள சில சொற்களைக் கூட தமிழில் எழுதாமல் வேண்டுமென்றே வடமொழியிலேயே செய்தித்தாள்களில் எழுதிச் சமற்கிருதத்திற்கு ஆக்கந்தேடுவதும், பார்ப்பனச் சேரியில் குஞ்சுங் குளுவானுமாகவுள்ள விடலைகள் முதல், திக்கொன்றாய்ச் சிதறிக் கிடக்கும் பார்ப்பனப் பாட்டுக்காரர்கள், பேச்சுக்காரர்கள் வரை பார்ப்பன ஆடவரையும் பெண்டிரையும் அவர்தம் அடிமைகளையும் கூட்டிப் பொறுக்கி வானொலிக் கூடத்தில் குழுமவைத்து ‘அருள் வாக்கு’ என்றும், ‘ஸுப்ர பாதம்’ என்றும், ‘மதுரகீதம்’ என்றும், ‘இசை அமுதம்’ என்றும், ‘சங்கீத உபந்நியாசம்’ என்றும், ‘மகிளா மண்டலி’ என்றும், ‘திண்ணைப் பேச்சு’ என்றும், ‘சிறுவர் கதம்ப நிகழ்ச்சி’ என்றும் ‘உரைச்சித்திரம்’ என்றும், ‘ஸம்ஸ்கிருத நிகழ்ச்சி’ என்றும், ‘ஊர்ச்சாவடி’ என்றும், ‘சூரிய காந்தி’ என்றும், ‘மணிமலர்’ என்றும், ‘பெண்ணுலகம்’ என்றும், ‘மெல்லிசை’ என்றும், ‘ஒளி மிகு பாரதம்’ என்றும், ‘விவசாயிகளுக்கு’ என்றும், ‘ஜயபேரி’ என்றும், ‘மாதர் நிகழ்ச்சி’ என்றும், பலவாறாக ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கற்பனைக் கதைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றிற் கலந்து கொண்டமைக்காக ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான அரசினர் பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வதும், அரசினர் அலுவலகங்களில் மேலாளராகவும், செயலாளராகவும், தலைமையராகவும், கணக்காளராகவும், ஆய்நராகவும் அமர்ந்துகொண்டு எங்கெங்கெல்லாம் தமக்கும் தம் இனத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டுமோ அங்கங் கெல்லாம் அவற்றைக் கொடுப்பதும், அவ்வழியில் குறுக்கிடும் தமிழர்களைப் பல்லாற்றானும் கெடுப்பதும் நாம் நாள்தோறும் கண்டு மனம்புழுங்கி உள்நடுங்கும் செயல்களாகும்.

‘மேட்டுர் அணைத்தண்ணிர்’ என்றெழுதாமல் ‘மேட்டுர் டாம் ஜலம்’ என்றும் ‘கண்ணிர்ப் புகை யூட்டப்பட்டது’ என்பதைக் ‘கண்ணிர்ப் புகை பிரயோகிக்கப்பட்டது’ என்றும் ‘கூட்டம்’ என்பதைக் கோஷ்டி என்றும் வேண்டுமென்றே எழுதித் தமிழைக் கெடுத்துவரும் அவர்களின் கேடயங்களான சுதேசமித்திரன், தினமணி, ஆனந்தவிகடன், கல்கி முதலிய தாள்கள் செய்யும் குறும்புத்தனங்களுக்கோ அளவில்லை. கீழுள்ள செய்தி அவர்கள் தாள்களில் ஒன்றான ‘தினமணி'யில் வெளிவந்தது. அதனை அப்படியே தருகின்றோம்.

“சென்னை ராஜ்யத்தில் வறட்சிப் பிரதேங்களில் ஸர்வே நடத்தி, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக சர்வே கோஷ்டியைச் சர்க்கார் நியமித்தது.