பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


தமிழ்மொழியையும் கலப்புற்றதாக்கி மொழிக்கலப்பும், கருத்துக் கலப்பும், இனக்கலப்பும் செய்து கையோங்கினர். அன்றிலிருந்து படிப்படியாகத் தமிழர் தாழ்ந்தனர். இவற்றிற்கெல்லாம் அவர்களின் மறைநூல்களிலும் தமிழர் தம் பண்டைய நூல்களிலும் மறுக்கமுடியாச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. அன்று அவர்கள் ஏற்படுத்திய குலச் சேற்றிலிருந்தும், சமயச் சகதியிலிருந்தும் தூய இறைநெறியரான தமிழரை விடுவிக்கப் பல போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் அப் போராட்டங்களின் தோல்விக்கெல்லாம் முற்றும் முழுக் காரணமாயிருந்தவர்கள் தமிழர்க்குள்ளேயே முளைத்த வீடணர்களும், பிரகலாதன்களும் . ஆகிய கோடரிக் காம்புகளே! ‘தமிழ்மொழியினும் தேவமொழியான வடமொழியே உயர்ந்தது’ என்று நக்கீரனிடத்துச் சொற்போரிட்ட குயக்கொண்டான் முதல், ‘சமற்கிருதம் கல்லாமற் போயின் பொறியியல் அறிவை முற்றும் பெற வாய்ப்பில்லை’ என்று இக்கால் திரிபுரை கூறித் திரியும் சென்னைத் தொழில் நுட்பக் கல்லூரி இயக்குநரும், வையாபுரியின் மூன்றாம் பிறங்கடையரும், (முதலிரண்டு பிறங்கடையர் தெ.பொ.மீ.யும், அண்ணாமலை முத்துச்சண்முகமும் ஆவர்) ஆன முத்தையன் இவரைப் பற்றிய செய்திகளும், இவர் கூறும் துணிந்த புரட்டுகளுக்கு மறுப்பும் விரைவில் தென்மொழியில் வெளிவரும்) வரை தமிழையும் தமிழரையும் தாழ்த்திய - தாழ்த்திக் கொண்டிருக்கின்ற கோடரிக் காம்புகளே ஆகும். இப்படித் தமிழரைத் தமிழர்க்குள்ளேயே தோன்றிய ஒரு சிலரைக் கொண்டு ஆட்டுவிக்கவும், அடிப்படுத்தவும் அவ்வக்கால் ஆரியத்தலைவர்கள் பலர் தோன்றிக் கொண்டே உள்ளனர். அவ்வழித் தோன்றி, இக்கால் தமக்கும் தம் வழியினர்க்கும் புறம்பாகப் போகும் இந்திய அரசையே சேற்றிற் புகுந்த எருமை யெனக் குழப்பிக் கொண்டிருக்கும் ஆரியத் தலைவரே திரு. இராசாசி அவர்கள்.

திரு. இராசாசியின் அறிவும், வினைப்பாடும் என்றும் ஆரியப் பார்ப்பனர்களின் நலங்கருதியே நிற்கும் காந்த முட்கள்! அவர் காட்டும் வழி ஆரியர் வெட்டிய படுகுழிக்குத் தமிழரையும் பிற இனத்தவரையும் இட்டுச் செல்லக்கூடியதாகவே இருக்கும் என்பதில் எவர்க்கும் எள்ளளவும் ஐயப்பாடு வேண்டா. ஐயப்பாடு கொண்டவர் எவராயினும் அவர் தமிழராகவும் தமிழர்நலங் கருதுபவராகவும் இருக்கவே முடியாது. இதற்குக் கடந்த காலத் தமிழகத்தின் அரசியல் வரலாறும், குமுகாய வரலாறுகளுமே சான்று கூறி நிற்கும். தென்னாட்டுக் கலப்பற்ற ஆரியப் பார்ப்பனராகிய அவர் நெஞ்சம் ஆரியர்களின் வேள்விக் களரி. அவர் எழுதும்