பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


தனக்கு முன்னோடியாக இருந்த ஒர் ஒப்புயவர்வற்ற மீமிசை மக்களினத்தை இழந்துவிட்டது என்று சொல்லலாம். இவையெல்லாம் வெறும் கற்பனையோ, கதையோ, கனவுகளோ அல்ல. ஏக்கப் பெருமூச்சுகள்! வரலாற்றுக் குமுறல்கள்! கண்ணிரால் எழுதப்பெற்ற பாவிய வரிகள்! அம்மாவோ இத்துணைச் சிறப்பு வாய்ந்த மக்களின ஒவியங்கள் அத்தனையும் இன்று அழிக்கப்பெற்றன. அவ்வாறு அழித்துவரும் ஒரு வலிமை வாய்ந்த - கரவு வாய்ந்த - ஏமாற்று நிறைந்த ஆரிய இனத்தின் கடைசித் தலைவராக இருப்பவரே இராசாசி! இவரைத் தமிழர்கள் இனங் கண்டுகொள்ள வேண்டுமென்பதற்காகவும், இவர் முயற்சிக்கு என்னருமைத் தமிழர்கள் துணைபோகக் கூடாது என்பதற்காகவுமே இவற்றை இங்கெடுத்துக் கூறவேண்டி வந்தது.

ஆரிய இனத்தின் தனித் தலைவராக விளங்கிக் கொண்டிருக்கும் இராசாசியின் அரசியல் போராட்டங்கள் தனி வடிவம் பெற்றவை. அவர் பொருளியல் போராட்டங்கள் தனி உருவம் சான்றவை. அவர் கூறும் சீர்திருத்தங்களுக்கு அடியில் என்றுமே ஆரிய வேர் கிளைத்துக் கொண்டிருக்கும். இவற்றை மனத்தில் உட்கொண்டே அவர் போக்குக்குப் பொருள் காணவேண்டும்.

இக்கால் இந்தியாவில் எழுந்துள்ள அரசியல் அழுகல்கள் இந் நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பேராயக் கட்சியின் தான்தோன்றித் தனமான - முரட்டுத்தனமான போக்கின் விளைவு என்பதை எவரும் எந்நிலையிலும் மறந்துவிட முடியாது. ஆனால் அத்தகைய விளைவையே தங்களுக்குத் துணையாகப் பயன்படுத்திக் கொண்டு, குழம்பிக் கிடக்கும் மக்களைத் தங்கள் கொட்டாரத்திற்கு அழைத்துச் செல்லும் நிலைகளையே நாம் மறக்கமுடியாமல் கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது; கண்காணிக்க வேண்டியுள்ளது. குமுகாய உரிமையற்றுக் கிடக்கும் மக்களிடம் குமுகாய விடுதலை நாடகமாடியும், அரசியல் உரிமையற்றுக் கிடக்கும் மக்களிடம் அவர்களுக்குப் புரியாத அரசியல் பாட்டிசைத்தும், பொருளியல் தாழ்ச்சியுற்றுக், காய்ந்த வயிறும் மேய்ந்த நலனுமாக ஒட்டியுலர்ந்து பேசவும் திறனற்ற மக்களிடம் - தங்களுக்குற்ற தேவைகளைத் தாங்களே கேட்டுக் கொள்ளவும் தெரியாத மக்களிடம் - செல்வச் சிறப்புகளை அழகுபெற எழுதிக் காட்டியும் நடித்துக் காட்டியும் ஆட்சி நாற்காலிகளைப் பிடிப்பதற்கு இராப்பகல் காத்துக் கிடக்கும் வேட்டை நாய்களையே நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பதவியெனும் பச்சை