பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

85


அரத்தத்திற்குப் பணம் என்னும் பலிக்கடாக்களைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், அவ்வரத்தம் குடிக்க நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் ஆரிய நரிகளை நாம் இனங் காட்ட வேண்டியுள்ளது. அது நாம் நம் தலைமேலே எடுத்துப் போட்டுக் கொண்ட கடமைகளில் தலைமை யானதும், இன்றியமையாததுமாகும்.

ஆரியப் பார்ப்பனர் தம் வேராக நின்று இயங்கும் இராசாசி வேண்டும் மாற்றங்கள் இரண்டு. ஒன்று வழிவழிக் காலமாகத் தம் திருமறைப் பட்டயத்தின் வைப்பூட்டாக இருந்துவரும் தமிழகத்தில், தம் செல்வாக்குக் குறைக்கப்பட்டு வருதலை - குமுகாய நிலையில் விழிப்பேற்பட்டு வருதலைத் தவிர்த்துத் தம் இனத்திற்குக் காப்பேற்படுத்துவது. இரண்டு, தமிழகத்தின் இந்நிலைக்குச் செவி சாய்த்துக் கொண்டு வரும் வடவரின் ஆட்சி வண்டியில் தம் இனத்தை ஏற்றிவைப்பது. இவ்விரண்டு மாங்காய்களையும் ஒரே கல்லில் அடிப்பதற்கே திரு. இராசாசி அவர்கள் காலத்தையும் கருவியையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றார்.

தமிழர்கள் இந்நிலையில் புரிந்துகொள்ள வேண்டிய சில விளக்கங்கள் இவை. நாம் குமுகாய நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது பார்ப்பனர்க்கு அரசியல் நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது வடவர்க்கு; பொருளியல் நிலையில் அடிமைப்பட்டுக் கிடப்பது அப் பார்ப்பனரும், வடவருமே ஆண்டு நுகர்ந்துவரும் முதலாளித் தன்மைக்கு என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளல் வேண்டும். இதை இன்னுங் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நமக்கு முதல் பகை பார்ப்பனரே! இரண்டாவது பகையே வடவர்! பார்ப்பனரின் பகை உட்பகை. வடவரின் பகை புறப்பகை. பார்ப்பனரின் உட்பகையே நமக்கு இன்று நேற்று ஏற்பட்டதன்று; கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தைச் சுற்றிச் சூழ்ந்து வருவது; பின்னிப் பிணித்து வருவது. வடவர் பகை நமக்குக் கடந்த பதினேழு ஆண்டுகளாகவே ஏற்பட்டு வருவது. அன்றைய வடநாட்டுப் பகை வேறு, இன்றைய வடநாட்டுப் பகை வேறு. அன்றைய பகை ஆரியப்பகை; இனப்பகை. இன்றைய பகை ஆட்சிப்பகை. தமிழர்க்கு நலம் பயவாத இந்த இரண்டு பகைகளும் வெட்டிப் புதைக்கப்பட வேண்டியவையே ஆகும். அவ்வாறு செய்யாவிடில் தமிழர் இனம் இன்றிருக்கின்ற நிலையினின்று இன்னும் தாழும் என்பதும், தமிழ்மொழி இன்னும் சிதைக்கப்பட்டு ஒழியும் என்பதும் மறுக்கமுடியாத உண்மைகளாகும். இந்த