பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பாஸ்கரத் தொண்டைமான்



தெய்வத் தன்மையை எல்லாம் விளக்கிக் கொண்டே போகிறார். ஆவினன்குடி இருக்கும் அண்ணலைத் தேடி வருபவர் தொகையும் என்ன கொஞ்சமா? பிரணவப் பொருள் அறியாப் பிரமனைச் சிறையிட, அவனது படைத்தல், தொழிலே நின்றுவிடுகிறது. படைப்பு இல்லாவிட்டால் காத்தல் ஏது? அழித்தல் ஏது? இப்படி முத்தொழிலும் ஸ்தம்பித்து நிற்க கடவுளர் மூவரும் தத்தம் தொழிலை இயற்றவும், பிரமனைப் பழைய நிலையிலே இருத்தவும் விரும்பும் முனிவர், கந்தருவர், திருமால், ருத்திரன், இந்திரன் எல்லோருமே ஒரு நடை வருகிறார்கள். புள் அணி நீள் கொடிச்செல்வன், மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன், யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன், முதலியவர்கள் வருகின்ற வரிசையை எல்லாம் வகை வகையாக எடுத்துக் கூறுகிறார் கவிஞர். இதை எல்லாம் சொன்னவர் வழிபாட்டுக்கு உகந்த இடம் ஏரகம் என்பதைச் சொல்லி

உச்சி கூப்பிய கையினர்
...தற் புகழ்ந்து
ஆறு எழுத்து அடக்கிய
அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில்
நவிலப்பாடி
விரை அறு நறுமலைர்
ஏத்தி

வழிபடும் முறையை எல்லாம் இன்னும் விரிவாகவே விவரிக்கிறார். மேலும் மேலும் அவன் புகழ் பாடி

அறுவர் பயந்த
ஆறு அமர் செல்வ!
ஆல்கெழு கடவுள்
புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே!
மாற்றோர் கூற்றே!
வெற்றி வெல்போர்க்
கொற்றவை சிறுவ!
இழை அணி சிறப்பில்
பழையோள் குழவி!