பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. xiv. சாரங்க முனிவர் மீது தாமேறிக் கொண்டு சென்று சீரங்க நாதன் பள்ளித் திருக்கோலம் கண்ட பேற்றில் ஈரங்கொள் பக்திப் பாடல் கரைந்தை அருளிச் செய்தே பாரங்கொள் வினைகள் மாயப் பரத்திலே கலந்து விட்டார்: திருமங்கையாழ்வார் : 25. 26, நாலாயி ரத்தில் ஒன்றை நவில்பர காலர்; அன்பர் வேலாயு தத்தை ஏந்தி விழிப்புடன் காத்தி ருந்து மாலான அண்ணல் தன்னை வழிப்பறி செய்த கள்ளர் ஆவிநன் னாட்டு தித்த அருட்டிரு மங்கை யாரே! அழகுறு குமுத வல்லி அமுதவாய் பருக ஏங்கிப் பழகுறு மணத்தால் பற்றிப் பரமனுக் கடிய ராகி வழிப்பறிக் கொள்ளை யிட்டு வருத்துமோர் நெறியை விட்டு எழில்மிகு மாயன் தொண்டில் இணைதிரு மங்கை யாழ்வார்! சுப்பு ரெட்டியார் : 27. தேவாரம் திருமுறைகள் சித்தாந்தம் ஆகமங்கள் தேர்ந்த மேதை நாவாரச் சிவனருளைப் பாடுகின்ற அடியாரின் நலங்கள் பேசிப்