பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

ஆழ்வார்களின் ஆரா அமுது


தென்று அதன் உயர்ச்சியையும் புலப்படுத்துகின்றார். ஆழ்வார். மதி மிக அண்மையிலிருப்பதாகக் காணும் மலை வாழ் பிராணிகள் அதனைக் கைகொள்ள விரும்புவது இயற்கை. நஞ்சுமிழ் நாகம் எழுந்தனவி நளிர்மா மதியை செஞ்சுடர் நாவளைக் கும்.திரு மாலிருஞ் சோலை யதே!”* என்ற பெரியாழ்வார் பாசுரத்தாலும் இவ்விருப்பத்தை. அறியலாம். (2) இந்த ஆழ்வார் பொதுவாக திரிவிக்கிரமா வதாரம் 82 இராமாவதாரம், 33 கிருஷ்ணாவதாரம், 34 நரசிம்மாவதாரம், வராகாவதாரம், 39 கூர்மா வதாரம், 37 மச்சாவதாரம் போன்ற அவதாரங்களில் ஈடுபட்டிருந்தாலும் இராமகிருஷ்ண அவதாரங்களில் தான் அதிகமாக ஈடுபட்டிருந்ததை அறிய முடிகின்றது. எல்லா ஆழ்வார்களும் இத்தகையவரே. ஆயினும், கிருஷ்ணா வதாரத்தில்தான் தன் உள்ளத்தைப் பறி கொடுக்கின்றார். வான்மீகி கூறாத கூனியின் முதுகில் உண்டை கொண்டடித்த நிகழ்ச்சி இவர் பாசுரங்களில் காணப் பெறுகின்றது 31. பெரியாழ், திரு. 4.3:2 32. திருச். விருத். 27, 28, 74; நான். திருவந். 35, 58, 33. திருச். விருத். 28, 31, 32, 33, 39, 49, 51, 54, 56, 73; நான். திருவந். 8, 28, 53, 34. திருச். விருத். 26, 34, 36, 37, 38, 40, 41, 43,55, 86, 89; நான். திருவந், 16, 33, 57, 71. 35. டிெ - 24, 25, 52, 35. டிெ-28;-நான். திருவந். 70 37. திருச். விருத். 20, 21, 35, 88; நான்.திருவந். 22 38. டிெ - 35