பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi செல்வச் சீமாட்டியைத் தாங்கிக் கொண்டிருப்ப:ைன். இந் நிலையில் நாடோறும் எண்ணற்ற பக்தர்கள் அவனுடைய கருவூலத்தை நிரப்பி வழியச் செய்து கொண்டுள்ளனர். இந்த உறுப்பெருஞ் செல்வத்தை அவனைப்பற்றியும் அவன் அடியார்கள் பற்றியும் எழுதப்பெறும் நூல்கட்கு வரை யாது வழங்கும் நிதி உதவித் திட்டத்தில் இந்நூலும் நிதி உதவிபெற்று வெளிவருகின்றது. இந்த வேங்கடம் மேவிய விளக்கு மேலும் நான் எழுதிவைத்திருக்கும் மாணிக்க வாசகர் சடகோபன் செந்தமிழ் தாயுமான அடிகள் ஆகிய வற்றிற்கும், எழுதிவரும் கீதைப் பொழிவுகள் என்ப தற்கும், எழுத நினைத்திருக்கும் வடலூர் வள்ளல்" :பட்டினத்தடிகள் முதலான பக்திப் பனுவல்கட்கும் நிதி ஒளிக்ாட்டி அவற்றை அச்சேறச் செய்வான் என்ற திடமான நம்பிக்கை என்றும் என்பால் உண்டு. இவனது கருவியாக இயங்கிவரும் திரு K. சுப்பாராவ், திரு N. S. இராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் என் அன்பு கல்ந்த நன்றி என்றும் உரியது. இந்நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய கற்பக அச்சக மேலாளர் திரு. க. நாராயணன் அவர் கட்கும், எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக் கட்டை தயாரித்து, மூவண்ண்த்தில் அச்சிடும் வரையிலும் பொறுப்பேற்று உதவிய ஒவிய மன்னர் திரு. P. N. ஆனந்தன் அவர்கட்கும், காப்புறை (Lamination) போட்டு உதவிய மாருதி லாமினேஷன் உரிமையாளர் திரு. பார்த்திபன் அவர்கட்கும், இவ்வளவும் ஆன நிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத் தவழிச் செய்த திரு. W. திருநாவுக் கரசுக்கும் என இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றேன். இந்த நூலுக்கு சிறப்புப் பாயிர மாலை நல்கிய கவிஞர் காரா. காச்சியப்பன் செட்டிநாட்டில் ஆத்தங்குடி முத்துப் பட்டணத்தைச் சேர்ந்தவர்; தன வைசிய மரபில் தோன்றி யவர் (பிறப்பு 13-1-1927). அறுபது அகவையைத் தாண்டிய இவர் தம் வாழ்க்கையைத் தமிழகத்திலும் பர்மா விலும் நடத்தியவர். 1950-முதல் சென்னையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி நிலையாக அச்சுத் தொழிலை நடத்தி வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் இடை நிலை வகுப்பு வரை படித்திருந்தாலும் தமிழில் பெரும்