பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 33 வளைத்தல் கூடற்குறி என்ற திருநாமங்களாலும் வழங்கப் பெறும். திருமழிசை பிரானும் அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண, இழைப்பன் திருக்கூடல் கூட' (நான். திருவந். 39) என்றருளிச் செய்திருப்பது ஈண்டு நினைத்தல் தகும் - இச்செயலை அநுகரித்து ஆண்டாளின் நான்காவது திருமொழி அமைகின்றது. ஒவ்வொரு பாசுரமும் கூடிடுகூடலே என்று முடிவு பெறுகின்றது. இ ந் த த் திருமொழியிலும் ஒரு பாசுரத்தைக் காட்டுவேன். காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன் ஓட்டரா வந்துனன் கைப்பற்றித் தன்னொடும் கூட்டு மாகில், கூடிடு கூடலே (2) (வாட்டம். மனக்குறை; ஒட்டரா.ஒடி ஒட்டம் தரா.ஒட்டி-ரா.1 எம்பெருமான் என்னோடு அணைய வேண்டும் என்று இருவேங்கடமலை, திருக்கண்ணபுரம் முதலிய திருப்பதி களில் வந்து நிற்கின்றான்; எனக்கு இசைவு உண்டோ? இல்லையோ? என்று ஐயுற்றுத் தாமதித்து நிற்கின்றான் போலும்! அப்பெருமான் என்னுடைய அதிக ஆவலை நன்கு அறிந்து சடக்கென்று ஓடிவந்து என்னைத் தன்னோடே அணைத்துக் கொள்ளுமாறு விதிவாய்க்க வேண்டும்' - என்று எண்ணுகின்றாள். காட்டில் வேங்கடம் : தண்டகாரண்ய வனத்தில் இருடி களோடு கூடியிருந்து வனவாச ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும் திருமலை வாசம் என்பதைக் காட்டுகின்றது. இத் தொடர். கண்ணபுரநகர்: வனவாசம் முடிந்து திரு லுயோத்தியில் அனைவரோடும் கூடியிருந்து நகரவாச ரஸம் அநுபவித்தபடிக்கு ஒப்பாகும் - திருக்கண்ணபுரவாசம் ஏன்பதைக் காட்டுகின்றது. இத்தொடர். திருமலையை 3