பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானப் பூங்கொடி 35 நனுக்குப் புருஷார்த்தம் அன்று என்ற ஸத்ஸ்ம்ப்ரதாயர்த்தம் விளங்கும். வாமனன் ஒட்டராவந்து: இந்த வாக்கிய சந்தர்ப்ப ஸ்வாரஸ்யத்தால் பெரிய வாச்சான் பிள்ளை அருளிச் செய்வது: ஒரடி மண்ணுக்குப் பதறுமவன் இவர்களைப் பெறும் போதைக்கு ஆறியினரானிறே. ஆஸுரப்ரக்ருதியான மகாபலி முன்னே கழஞ்சு மண்ணுக்குப் பதறி நடக்குமவன், இவளொடு தலையானால் ஆறியிரானிறே. காற்றில் முன்னம் கடுகி ஓடிவரக் கடவனிறே' என்பது.

  • கூடிடு கூடலே!': நீ கூடி என்னையும் கூட்டு - என்பது வியாக்கியான பூரீசூக்தி - கூடலை நோக்கிப் பேசுவது, அவன் எழுந்தருளி என்னைக் கூட்டிக் கொள்ளும்படியாக நீ அநுகூலிக்க வேணும் என்றபடி.

கூடல் அசேததம் ஆகையாலே அது சொல்ல 'மாட்டாது என்றறிந்தவள் அருகிலிருந்த ஒரு குயிலை நோக்கி எப்படியாவது அவன் என்னிடம் வந்து கூடும்படி கவாய்' என்று அதன் காலின் வீழ்ந்து வேண்டுகின்றாள். :பவள வாயன் வரக்கூவாய்' என் வேங்கடவன் வரக் கூவாய்', 'என் கருமாணிக்கம் வரக்கூவாய்", கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய்', உலகளந்தான் வரக் கூவாய்' என்று கூறுபவள், என் தத்துவ னைவரக் கூகிற்றியாகில் தலைஅல்லால் கைம்மாறு இல்னே (6) என்கின்றாள். இங்கு, குயில் பேசுமோ? என்ற வினா எழுகின்றது. தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் தலைவி அஃறிணைப் பொருள்களையும் கூட விளித்துக் கூறுதல் கவி மாவு. அஃறிணைப் பொருளை அங்ஙனம் விளித்துக் கூறுதல் காமம் மிக்க கழிபடர் கிளவி என்று சொல்லப் பெறும். காமம் மிக்க - (பிரிவினால்) காதல்