பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மார்க்சீயம் புதிய கோட்பாட்டை உலகுக்கு அறிவுறுத்துகிறது. தனி மனிதனின் ஒழுக்க மேம்பாடும் வாழ்வும் வளமும் பொருள் உற்பத்தியையும் அதன் பங்கீட்டு முறையையும் ஒட்டி அமைந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. சமயம் தத்துவம் இந்தச் சொற்களுக்குப் புதிய பொருள் தந்து ‘நீ மனிதனை நேசி! என்ற கோட்பாட்டில் காட்டுகிறது. ‘மனித வாழ்வை நேசி! என்பது மார்ச்சீயத்தின் முடிந்த முடிவு; இன்று மார்க்சீயம் நம் இளைஞர்களைப் புதிய சிந்தனைப் போக்கில் இட்டுச் செல்கிறது.

பிராய்டிசம் என்பது மனித இயல்பையும் ஆசாபாசங்களையும் விளக்கும் கோட்பாடாகும். பாலியலை ஒட்டியே வாழ்வியல் அமைந்துள்ளது என்பது இதன் அடிப்படைச் சித்தாந்தம். இந்த அடிப்படையிலேயே இன்றைய மனோ நிலை சமுதாய அமைப்பு இயங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை; தனி ஒருவன் நினைவுக்காகத் தாஜ் மகால் கட்டிடம் கட்டப்பட்டது என்றால் அது எதனைக் காட்டுகிறது? இது மனிதனின் ஆரம்ப மனோநிலையாக இருக்கலாம்; அதனை மாற்றி மனிதனை மனிதன் நேசிக்கும் சமுதாய நல் உணர்வு பெருகும் போது பாலியல் இரண்டாம் இடத்தையே பெறுகிறது. அந்தப் போராட்ட நிலை இன்று உருவாகி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. தனிமனித நல்வாழ்வுக்கே தரும் முதலிடத்தைப் போலவே சமுதாய நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற கோட்பாடு இன்று வளர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் எப்படி இயங்கி வருகிறோம் என்று சிந்திப்பது தேவையாகிறது.

இங்கிலாந்தோடு நெருங்கிய தொடர்பு

பாரத அன்னையின் விடுதலைக்கு முன் நின்ற காந்தி அடிகள் சட்டப் படிப்புப் படித்த தேசம் அது; நேரு