பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
நூலாசிரியர்


"பயனுள்ள வரலாற்றைத் தந்த தாலே
    பரணர்தான்; பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
    நக்கீரர் தான், தாங்கள்! இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால், தொல்
    காப்பியர்தான்! காப்பியர்தான் எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
    தாங்கள், அவ் ஒளவைதான்! ஒளவை யேதான்!”


என்பது உரைவேந்தரிடம் கல்வி கற்றுப் பலர்போற்றும் கவிஞராகத் திகழ்ந்த மீ இராசேந்திரனின் கவிதை!

இத் தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்ப் பேரறிஞர்கள், மாநாடுகளிலும் மேடைகளிலும் பேசிய பேச்சுக்கள், நூலாக எழுதாமையால், காற்றோடு காற்றாக மறைந்து போயின. அவ்வாறே கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெரும் பேராசிரியர்களாக இருந்தவர்கள்கூடத் தமது நுண்மாண் நுழைபுலத்தை நூல்வடிவில் காட்டாது போயினர்! சிலர், மேடை முழக்கமிடுவர்; ஆனால் எழுத்துத் திறமை இருக்காது! அவ்வாறே, அரிய பல நூல்களை எழுதுவர்; ஆனால், மேடையேறிப் பேசும் நாவன்மை இருக்காது! இவ்விரண்டும் ஒரு சேரப் பெற்றவர் ஒரு சிலரே! அவருள் ஒருவராக விளங்குபவர் உரைவேந்தர்!

"பிள்ளையவர்கள் (உரைவேந்தர்) இணையற்ற நிறுவவும், தம் பெயர் பரப்பவும், தம் வாழ்வுக்கு வசதி பெறவும் நூலியற்றுவோர் பலர்! தமிழ்மொழியின் உயர்நிலையில் உள்ள குறையை