பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

27


ஒரு காலத்தில் உலுக்கிய நிகழ்ச்சிகளிலேயே நிலை பெறுகிறது என்றால் தவறில்லை.

எல்லம்மனின் ஆதிப்பெயர் ரேணுகை. இவள் மாதங்கினி என்றும் வழங்கப்பெறுகிறாள், (மாதங்கினி-மாதாவின் அங்கங்களைப் பெற்றவள்)

ரேணுகை, தென்னகத்து, தாயாண் குழுவைச் சேர்ந்த மங்கை. இவளை வடக்கிலிருந்து, தந்தை நாயக மரபில் வந்த ஜமதக்கினிமுனிவர் உரிமையாக்கிக் கொள்கிறார்.

ஒருநாள் ஜமதக்கினி முனிவர் வெளியே சென்றிருந்தார். அப்போது கார்த்த வீரியார்ச்சுனன் இவர்கள் குடிலுக்கு விருந்தினனாக வந்தான். தங்கிச் சென்றான்.

(காலையில் முனிவரின் வழிபாட்டுக்கு ஆற்றுமணலில் லிங்கம் பிடித்துவைக்க ரேணுகை முனைகிறாள்) வரவில்லை. உள்ளத்தில், கற்பு மீறிய களங்கம் இருந்ததால் வரவில்லை என்பது உட்கருத்து. லிங்க வழிபாடே தந்தையாண் மரபு, தாயாண் மரபை மிதித்து மேலேறும் ஒரு செயலின் பிரதி பலிப்பு என்று கொள்ளலாமோ? முனிவர் உண்மையறிகிறார். சினம் கொழுந்துவிட்டெரிகிறது. மாற்றானை அவள் அனுமதியின்றி இருப்பிடத்தில் தங்கவைக்கலாமா? அவரே அநுமதித்து மனைவியை விருந்தினருக்கு அளிப்பது வேறு. ஆனால் விருப்பம் என்று உரிமைக்குத் துரோகம் செய்யலாமா? எனவே அவர் தம் புதல்வர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துத் தாயைக் கொல்ல ஆணை இடுகிறார்.

மூத்த புதல்வர்கள் ஒருவரும் இக்கொடிய செயலைச் செய்ய இணங்கவில்லை.

எல்லோரிலும் இளையவனான பரசுராமனை அழைக்கிறார். “உன் தாயைக் கொன்றுவிடு! அவள் பதிதை!” என்று ஆணை இடுகிறார். ரேணுகை நடுநடுங்கி, “விருந்தோம்பும் பண்பாட்டுக்கேற்ப நான் நடந்தது தவறா?” என்று இறைஞ்சுகிறாள்.