பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




மொட்டை மாடு கட்டியே
கட்டை வண்டி வருகுதே!
எட்டி வழியை விட்டுமே
இருக்க வேண்டும் ஓரமே!


'ஓம்!ஓம்! என்று கூவியே
உந்து வண்டி வருகுதே!
நாமும் விலகி நின்றுமே
கடக்க வேண்டும் என்றுமே.


ஏறி மிதிக்க வருகுதே
இரண்டு சக்கர வண்டியும்!
மாறி ஓரம் இருந்துமே
வழியில் ஒதுங்க வேண்டுமே!

38