இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160சு. சமுத்திரம்
“புத்தி சொல்லவேண்டியது அவளுக்கில்ல. அவள் சொன்னது சரிதான்! இந்தக் கல்யாணத்துல இஷ்ட மில்லைன்னு நீங்களா சொல்றீங்களா... இல்ல நானே போய் சொல்லட்டுமா? வீட்டுக்குள்ளேயே ஒரு லாக்கப்பில் ― அதுவும் ஜாமீன் இல்லாத ஒரு லாக்கப்பில் ― அவள் மாட்டிக்க எனக்கு சம்மதம் இல்லை. போய் சொல்லுங்க!”
‘அவர்’ நொண்டியடித்துப் போய்க்கொண்டிருந்தார்.
✽