பக்கம்:இன்னொரு உரிமை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 சு. சமுத்திரம்


லிங்கையா கூனிக் குறுகி ஏச்சுக்கும், ஒருவேளை உதைகளுக்கும் தன்னை ஆயத்தம் செய்தபடி கண்மூடி நின்றான். அரை நிமிடமாகியும் எதுவும் ஏற்படவில்லை. கண்ணைத் திறந்து பார்த்தால் பிள்ளைகள் மீண்டும் தெரேஸா அம்மாவைச் சூழ்ந்தபடி, ஆழ்ந்த கவலையோடு நின்றார்கள். அவனை ஒரு பொருட்டாகக் கருதாததுபோல அம்மாவின் காலை மட்டுமே பார்த்தபடி நின்றார்கள்.

லிங்கையா தன்னை மறந்து, அந்தக் குடும்பத்தைக் கையெடுத்துக் கும்பிடப் போனபோது-

ஜல்ஜல் சத்தத்துடன் துருத்திய வயிற்றோடு சோடா பாட்டில் கண்ணாடியுடன் ஒருத்தர் உள்ளே வந்தார், அவனுடைய அதிகாரி!

அவரைப் பார்த்ததும் அவரிடம் ஆறுதல் நாடி லிங்கையா, அழப்போன போது அவரே அதட்டினார்.

"கடைசியில் இவங்களையும் அடித்துப் போட்டுட்டியா. உன்னை இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பேரை சாகடிப்பியோ! இந்தாங்கம்மா, நடந்ததை ஒரு ஸ்டேட் மெண்ட்டாய் கொடுங்க. இவனையும் தீர்த்துக் கட்டிட்டு, உங்களுக்கும் டில்லிக்கு எழுதி, பத்தாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் நஷ்டஈடு வாங்கித் தரேன். சூட்டோடு சூடாய் எழுதித்தாங்க. ஏய் லிங்கையா வேர் இஸ் யுவர் லாக் புக் மேன். இந்தாம்மா நீ எழுது. அம்மா கையெழுத்து போடும். இரண்டு மாதத்துல பணம் வந்துடும்."

தெரேஸா நிச்சயமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் எந்தவிதச் சந்தேகமும் ஏற்படாமல் அதிகாரி, பூட்ஸ் காலைத் தூக்கித் தூக்கி அடித்த படி நின்றார்.

கதி கலங்கிப் போன லிங்கையா எந்தவித உணர்வையும் காட்டாமல் கிடந்த தெரேஸவையும் பார்த்தான்.

அம்மா, அம்மா’’ என்று மனதுக்குள் கூவியபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/83&oldid=1369069" இலிருந்து மீள்விக்கப்பட்டது