பக்கம்:இன்னொரு உரிமை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சு.சமுத்திரம்



 "விடும்மாமா. அவன்கூட இவளையும் சேத்துப் புதைக்கணும். புருஷன் தலைவிரி கோலமா கிடக்கான். இவள் இன்னும் இந்த அவுத்திக்கீரையைக் கீழே போடாம நிக்கிறத பாரும்!' 
கனகராஜ் ஐயாசாமியை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்டு, லிங்கம்மாவைக் காலால் மிதித்தான். அவன் சக்தி வாய்ந்த கால் இடுப்பில் பட்டதால், அப்படியே சுருண்டு விழுந்த விங்கம்மா சிறிதுநேரம் அசைவற்று இருந்துவிட்டு, பிறகு சிதறிக் கிடந்த அவுத் திக்கீரைகளை எடுத்துக்கொண்டிருந் தாள்.
கனகராஜ் மேலும் அடித்திருப்பான். ஐயாசாமியைத் தவிர வேறு யாரும் அவனைத் தடுத்திருக்க மாட்டார்கள். அதற்குள் வைரமணி அந்த அரைக்கண் மயக்க நிலையிலும், தன் சட்டைப்பைக்குள் விரலைக் கொண்டு போனான். உடனே ஒருவர் அவன் பைக்குள் கையை விட்டார்.
"தங்கரளிக்கொட்டையைத் தின்னுருக்கான்."
"இருபது... இருபத்தஞ்சு முட்டையை உடச்சு.... வெள்ளக்கருவை மட்டும் எடுத்துக்கொடுங்க. ஒரு நொடில முறிச்சிடும். சீக்கிரமாக் கொண்டு வாங்க."
ஒவ்வொரு வீட்டிலும் 'உறி'யில் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் அங்கே குவிந்தன.
வைத்தியர் ஒரு பச்சிலையை ரகசியமாக வைத்துக் கொண்டு வரும்போது, 'சச்சுவேசன் வைத்தியர்' கொடுத்த யோசனையில் வைரமணிக்கு முட்டைகள் உடைக்கப்பட்டு வெள்ளைக்கரு வாயில் ஊட்டப்பட்டது. பத்து நிமிடத்தில் உரை வருவதும், கண் சொருகுவதும் நின்றுவிட்டன. ஆள் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் பலர் பேசத் துவங்கினார்கள். எல்லோருக்கும் அவன் தற்கொலை செய்துகொள்ளப் போனதற்குரிய காரணம் தெரியும். இருந்தாலும் அதை வெளிப்படையாகக் கூறாமல் தீர்ப்பு களை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/89&oldid=1369372" இலிருந்து மீள்விக்கப்பட்டது