இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
108
இரவீந்தரநாத் தாகூர் - எண்ணக் களஞ்சியம்
மனத் துன்ப மதுவை உறிஞ்சி விட, மகிழ்ச்சியைப் பிழிந்து விடவில்லை நாங்கள்.
-தோ
★★★★
மீட்டப்படாத இசையின் பண்ணொலியை நீ கேட்டதில்லையா?-
க.பா
★★★★
வேனிற் காலத்தில் மலர்கள் பூக்கும் என்பதை, ஐயப்படாமல், என் நெஞ்சத்தின் மாரிக்கால விண்ணின் மேல் தன் புன்முறுவலைச் சிந்துகிறது பருதி ஒளி.
-ப.ப
★★★★
அடக்கத்தின் உறைவிடமாகவிருக்கட்டும் உனது மணிமுடி, உன் ஆன்மாவின் விடுதலையாக இருக்கட்டும் உனது விடுதலை.
-தே
★★★★
நிறைவை அடைவதற்காக வறண்ட ஆண்டுகளின் பாலைவனப் பகுதிகளை நீ கடந்து செல்கிறாய்.
-ப.ப
★★★★
கட்டுப்பாடுதான் நல்லவர்களின் நுழைவாயில்.
-எ.எ
★★★★
வறுமையாகிற வெறுமையில் அன்றாடம் இறை-