32
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
உனது கரிய விழிகளில் மழையின் வருகை தனது இசையைக் காண்கிறது.
-கா. ப
★★★★
பனித்துளி இலை நுனியில் அசைந்தாடுவதுபோல்,காலத்தின் விளிம்புகளில் உனது வாழ்க்கை எளிதாய் கூத்தாடட்டும்.
- தோட்
★★★★
எனது காதலியிடமிருந்து எனக்குக் கடிதமொன்று வந்துள்ளது. அதில் வெளியில் சொல்ல முடியாத ஒரு தகவல் உள்ளது. இதோ, இறப்பச்சம் என்னை விட்டு அகன்று விட்டது.
- க.பா
★★★★
நிலவு உன் நெஞ்சத்தில் மறைந்திருக்கும்பொழுது, உதடுகளாகிற சாளரத்தை ஊடுருவி நுழையும் நிலவொளியைப் போன்றது உனது புன்னகை.
-கா. ப
★★★★
காதல் விளக்கை நெஞ்சத்தில் தாங்கியிருக்கும் பொழுது, அதன் ஒளி உன் மேல் விழுகிறது. நிழலில் நான் பின் தங்கிவிடுகிறேன்.
- க.கொ
★★★★
இரவின் இருட்டு பகலுடன் இணக்கம் காண்கிறது. மூடுபனி படர்ந்த காலைப்பொழுது முரண்படுகிறது.
- மின்
★★★★