பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12
பூதப் பாண்டியன்

ண்டு தனியரசு செலுத்தி, அண்மையில் திருச்சி மாவட்டத்தோடு இணைந்து போன புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒலிய மங்கலம் என்ற ஊரும், அதைச் சூழ உள்ள நாடும் கடைச் சங்க காலத்தில் முறையே ஒல்லையூர் எனவும், ஒல்லையூர் நாடு எனவும் பெயர் பெற்றிருந்தன. சோழ நாட்டிற்கும், பாண்டிய நாட்டிற்கும் இடையே அவ்விரு நாடுகட்கும் எல்லையாக ஓடுவது வெள்ளாறு. அவ்வெள்ளாற்றின் தென்கரை நாடுகள் தென்கோனாடு என அழைக்கப் பெறும். இத் தென்கோனாட்டின் மேற்பால் பகுதியே ஒல்லையூர் நாடு. எனவே ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லை நாடுகளில் ஒன்றாகும்.

ஒரு காலத்தில், அவ்வொல்லையூர் நாட்டைப் பாண்டியர்களின் குலப் பகைவராய சோழர் கைப் பற்றிக் கொண்டனர். பாண்டிய நாட்டின் வடவெல்லையில் பகைவர் வந்துவிட்டதால், பாண்டிய நாட்டின் பாதுகாப்பிற்குக் கேடுண்டாகிவிட்டது. அது பொறுக்க மாட்டாது பாண்டி நாட்டார் பெரிதும்