பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 புலவர் கா. கோவிந்தன்



இதோ பற்றி எரிகின்றது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனினும் என் உயிர் போய் விடவில்லை. வாழ்கிறது என் உயிர். இந்நிலை என்னைப் பெரிதும் வருத்துகின்றது. அவள் இறந்ததால் நான் பெற்ற நோய் அத்துணைப் பெரிதன்று. பிரிவுத் துயர் உண்மையில் மிகப் பெரிதாயின் அஃது என் உயிரையுமன்றோ கொண்டு போயிருத்தல் வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லையே! என்னே இவ்வுலகியல்! என்னே இவ்வியற்கையின் திருவிளை யாடல்!” என்றெல்லாம் கூறி வருந்தினான். இக்கருத்துக் களமைந்த பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. உள்ளத் துயரத்தை உயர்ந்த முறையில் வெளியிடும் சிறந்ததொரு புறப்பாடலாக அது திகழ்கின்றது.