-9-
எணுக்குள் தங்கள் உடலையும், மொழிக்குள் தங்கள் உணவுகளையும் புதைத்து வைத்துவிட்டுப் போயிருக் கின்றனர். எனவே மொழியுள் பழைய மாந்தரைப் புதிய மாந்தர் இனங் கண்டு கொள்கின்றனர்; புதிய மாந்தரைப் பழைய மாந்தர் வடிவமைக்கின்றனர்.
2: 9: மாந்தன் இறந்துபடுகின்றான்; மொழி இறந்து படுவதில்லை. இறந்து போன மொழிகள் அணைந்து போன விளக்குகள்; நிலத்துள் புதையுண்ட விதைகள், விளக்குகள் என்றேனும் கொளுத்தப் பெறலாம்; விதைகள் என்றேனும் முளைத்து வரலாம். [1]
2 : 10: தொகுப்பாகச் சொன்னால், மக்கள் இனத்தின் ஒட்டுமொத்தமான மனமே மொழி. ஒரு தனிப்பட்ட இனத்தின் காலம், இடம், பொருள் ஆகியவற்றின் பருமானங்களை அதன் மொழியில் காணலாம்.[2]
2: 11: இங்குக் கூறப்பெற்ற மொழியின் அளவை நிலைகளால் அது மாந்தவினத்திற்கு எத்துணை இன்றியமை யாத உறுப்பு என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
3:0 தமிழ்மொழியின் தனித்தன்மை:
3: 1: மொழிக்குள்ள சிறப்பியல்கள் அத்தனையும் விளங்கித் தோன்றும் முழுவளர்ச்சியுற்ற, உலகின் சில மொழிகளில், தமிழ்மொழி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இதன் தனித்தன்மை ஓர் இனத்தின் தனிவரலாற்றையே உள்ளடக்கியதுடன், உலக மொழிக் குடும்பத்தின் பரந்துபட்ட
தன்மைக்கே ஒரு மூல ஊற்றாக விளங்குகின்றது. இது