பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

17


 பெருமையில்லை. படிப்பு அற்ற மடையருக்குப் பொருள் இருந்தால் அதுவே அதிகப் பெருமையை ஈட்டித் தருகிறது.


இப்படி எண்ணத் தொடங்கியதால், அருள் திகழும் மனித வாழ்க்கையின் மாண்பில் இருள்சூழத் தொடங்கியது.


திரை கடலோடியும் திரவியம் தேடு' என்பதில் உள்ள அழுத்தம், கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்' என்ற முதுமொழியில் இல்லாமல் போயிற்றே!


காலையில் கண் விழித்து, களைப்பாக இரவு படுக்கைக்குப் போகும் வரை, பணம் பணம் என்று பருந்தாய் பறக்கும் ஆசையைத் தான் பொதுமக்களிடம் வளர்த்து விட்டார்கள்.


அதனால்தான், நமது சமுதாயம் பொருளை அடிப்படையாகக் கொண்டு, இயங்க ஆரம்பித்துவிட்டது.


சாதியை வைத்து, சகலத்தையும் நடத்திய நமது சமுதாயப் பண்பு, கொஞ்சம் கொஞ்சமாக மாறியதையும் நாம்காணமுடிகிறது.


தொழிலால் நான்கு வகை சாதி என்றனர். அவை தொள்ளாயிரமாக விரிந்து, பரந்து வேரூன்றிப் போனது.


'தருமம் இடுபவர் உயர்ந்த சாதி, இடாதவர் தாழ்ந்த சாதி” என்று தலைகீழாக ஒரு நிலையைத் திணித்து வைத்தாள்ஒளவைப்பாட்டி.


இப்பொழுது சாதி பற்றி சலசலப்பு இருந்தாலும், பணம் உள்ளவர்கள் ஒரு சாதி, பணமற்ற பராரிகள் ஒரு சாதி என்றுஇரண்டாகப் பிரிந்து நிற்கிறது.


இதனால் தான், இந்தப் பாடலுக்கு ஒரு புதிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.