இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
பொருளாகிய உடலை வளமான, வலிமையாகக் காத்து வாழ்கிறவனை வீட்டிலும் மதிப்பார்கள். நாட்டிலும் துதிப்பார்கள். அவன் வாய்வழி வரும் வார்த்தைகளையும் வணங்கி ஏற்பார்கள்.
நீங்களும் கைப்பொருளைக் காத்து வாழுங்கள், சேர்த்து வாழுங்கள், அதுவே மனிதப் பிறவியின் மகிமை. பெருமை.
குறிப்பு
உடல் என்பது ஓர் உயிரின் உடலைக் குறிக்கும் சொல்லகும். அன்றைய வழக்கில், உடல் என்பதை முதலீடு என்ற (Capital) பொருளில் வழங்கினர்.
திருத்தொண்டு செய்கிற திருமேனிகளுக்கு உடலாக, திரு நந்தவனக் குடிகளுக்கு கொற்றுக்கு உடலாக என்று கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. (பருகூர். அ. கிருட்டிணன்)