பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

45


தன்னைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமல்ல, சமுதாயத்திற்கும், பிறந்த தேசத்திற்கும் தொண்டு செய்கிற செயலே புனித வாழ்க்கையாகும்.

நான் நன்றாக இருக்கிறேன் என்று பேசுகிறபோது, யாருக்கும் பெருமையும் புகழும் வந்து விடாதே.

நான் செய்கிற தொழிலை நன்றாகச் செய்கிறேன். அந்த நோக்கத்தில் நான் நன்றாகவே உழைக்கிறேன் என்று சிறந்த பணியை தொடர்ந்து செய்கிறபோது தான் உண்மையான புகழும், நன்மையாக செல்வமும், நாடி வந்து நலம் பயக்கும்.

ஆகவே, இன்று முதல் ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். நன்றாக என்னைப் படைத்த இறைவன் மகிழ, நான் நன்றாக வாழ்வேன் என்பது தான்.

நன்றாக வாழுங்கள். நலமோடு வாழுங்கள்!