பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இலங்கை எதிரொலி


டிருந்தது. இப்படி சொல்லுகிற தோழர்கள் வாழும் இந்த சிங்களம் சுத்தோதனன் மகன்.சித்தார்த்தனுடைய (புத்தன்) சிறந்த கொள்கையுடைய நாடென்பதையும், புத்த விகாரங்களுக்கே முதலிடம் தந்திருக்கிற நாடென்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. புத்தன் நாத்தீகனா ஆத்திகனா என்ற சந்தேகத்துக்கு இடம் வைக்காமல், ஆண்டவனைப்பற்றிக் கவலைப்படாதே என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் சொல்லிமுடித்து விட்டார். எனினும் அப்பேரறிஞனை யாரும் ஒதுக்கித் தள்ளி விடவில்லை. அவன்பால் பர்மிய அரசாங்கம் கொண்ட அன்பின் காரணத்தால் தேங்காய் அளவுள்ள வைரம் ஒன்றை இலங்கைக்கு அனுப்பித் தந்த்தையும், அதை அனுராஜபுரத்திலிருக்கிற புத்த கோபுரத்தின்மேல் வைத்திருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆண்டவனே இல்லை என்று சொல்பவனைத்தான் நாத்தீர்கள் என்று சொல்லுவதாக நீங்கள் கருதுகிறீர்கள். உண்மைக்கு அது நேர் விரோதமானது. ஆண்டவனை இல்லையென்று சொல் பவன்தான் நாத்தீகன் என்று இந்தியப் புராணங்கள் எதிலும் காணப்படவில்லை. எவன் ஆண்டவனைப்பற்றி சந்தே கப்படுகின்றானோ, எவன் ஆண்டவனால் சொல்லப்பட்ட தென்ற சுருதிகளையும், எவன் அவனடியார்களால் சொல்லப்பட்டதாக இருக்கும் சிறு மிதிகளையும் அறிவோடு ஆராய்ந்து பார்க்கின்றானோ அவனே நாத்தீகன் என்று சொல்லப்படுகிறது. ஆண்டவனுல் படைக்கப்பட்டது இவ்வுலகம். ஆண்டவனுல் படைக்கப்பட்டனர் மக்கள். ஆண்டவனுல் படைக்கப்பட்டன. பல்வேறு பொருள்கள். வாதத்துக்காக உண்மையென்று வைத்துக்கொண்டால் நாங்கள் இலங்கைக்கு வரவும், இலங்கைத் தோழர்கள் இந்தியா வரவும் அனுமதி தேவையில்லை. யாரும் எங்கேயும் எப்போதும் போகலாம். காரணம், இந்த உலகம், உலகத்தில் தோன்றுகிற அணு எல்லாம் ஆண்டவனால்