பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இலங்கை எதிரொலி


தோழரை எச்சரிக்கை செய்கின்றேன். இங்கே இவ்வளவு நாட்களாக இயங்கிக்கொண்டிருந்த திராவிட முன்னேற்ற கழகத்தைப்பற்றி எங்களுக்குக்கிடைத்த செய்தியும் சொற்பம், நாங்கள் நினைத்துக்கொண்டிருந்ததும் கொஞ்சம். இங்கே வந்து பார்த்தபிறகு நாங்களே திடுக் கிடும்படியான நிலையில் இயக்க வளர்ச்சியையும் உங்கள் பேராதரவையும் காணும்போது இருதோள் பூரிக்கிறோம். இதைப்போன்ற பெரிய நகரத்தில்மாத்திரம்தான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறதா, அல்லது மலை நாடுகளிலும் இதைப்போலவே வளர்ந்திருக்கிறதா என்பதை அறியவே பத்து பனிரெண்டு கூட்டங்களை தோட்டத் தொழிலாளர்கள் பகுதியிலே ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்த சுற்றுப்பிரயாணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் உங்களைக்காணும்போது மற்றவைகளைப்பற்றிப் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டு என் சிற்றுரையை முடித்துக்கொள்ளுகின்றேன், வணக்கம்.

22-4-53-ல் நீர் கொழும்பில் கம்யூனிஸ்டு தோழர்கள் பணிமனையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத் திறப்புவிழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.

தலைவர் அவர்களே! தோழர்களே வணக்கம். சுமார் ஓராண்டுகாலமாக நிகோம்போ என்ற இந்ந நீர்க்கொழும்பில் நமது இயக்கம் தனித்தனி நபர்களிடம் இயங்கிக் கொண்டிருந்ததை ஒன்றாகத்திரட்டி இன்று இந்த மண்டபத்தில் திறப்புவிழாவாற்றியிருக்கிறோம். நாங்கள் இங்கே வருவதற்கு முன்பாக, நீங்கள் கூட்டம்போடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற இடம். கம்யூனிஸ்டு நண்பர்களுடையது. நேற்றுவரையிலும், எங்களைக் கோபித்துக்கொண்டிருந்தார்கள். ஏனெனில் எங்கள்