199
விஷயமென்ருல், சிலரைக் கைது செய்தால் போதும். ஆனல் இதைப்போன்ற சம்பவத்திற்கு முப்பதி லிருந்து ஐம்பது பேர் எப்படியும் கைது செய்யப் பட்டாக வேண்டும். அப்போதுதான் அதுபற்றிய அறிக்கையை உருவாக்க முடியும். யார் கைது ஆகி யிருக்கிருர்கள் என்பதுபற்றி யாருக்குக் கவலை?........” என்ருன்.
'கைதானவர்களை நாளைக்கே வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிடமாட்டார்கள் அல்லவா?”
"அதை நான் சொல்ல முடியாது அம்மணி. பட்டியல்கள் தயாராகி புகார்கள் செய்யப்படுவதற்கு இன்னும் இரண்டு நாட்களாகும்.”
'நன்றி, ஐயா.” - தெளிவாகச் சிந்தித்துப் பார்க்க இயலாத அளவில் கலவரத்துடன் முன்ளுேக்கி நடந்தாள் லெய்வா.
முற்றத்தில் எரிந்துகொண்டிருந்த நிறமற்ற காஸ் விளக்குகளின் உதவியால், சிறைச்சாலை சுற்று மதிலின் வாசல் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததைக் கண்டாள் அவள். இது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. லெய்வா தன் உறவினர்களைப் பார்க்க முயலுகிருள் என்றெண்ணிக்கொண்டு, வாசலுக்கு வெளியே சுற்றிலும் நின்ற பெண்கள் சந்தடியின்றி அமைதியாக இருந்தார்கள். உள்பக்கம் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்த வாசலின் வழியாக எட்டிப் பார்த்தாள். தோளுக்கு மேலே தாங்கிய துப்பாக்கி யுடன் படைக்காவலன் ஒருவன் முற்றத்தில் மெல்ல. நடைபோட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள்.