354
"ரோந்துப் படையினர் சமீபத்தில் இந்தப் பக்கம் வந்தார்களா?” என்று கேட்டான் சைசாம்.
'இல்லை; ஒரு வாரத்திற்கு முந்தி இராணுவ வீரர்கள் சிலர் மது அருந்த வந்தார்கள். அவர்கள் சிறிது நேரம் மாடியில் தங்கினர்கள். பிறகு போய் விட்டார்கள்.” - -
அவன் கபடமாக கண் சிமிட்டியதை ஈஸ்கவனித்தாள். .
உணவு பரிமாறிய அதேபெண் இப்போது, எண்ணெய் பசைமிக்க அழுக்குத் துணியால் மேஜை யைத் துடைத்துக்கொண்டிருந்தாள். கன்னத்து எலும்புகள் நீண்டு அவலட்சணமாக இருந்தாள். அவளுக்கு வயது முப்பது என்றும் அவள் ஒரு விதவை என்றும் வழிகாட்டி அவர்களிடம் சொன் ன்ை. அவளுடைய தலைமயிர் பெண்வாத்தின் வால் நுனிபோல் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவள் குனிந்து மேஜையை அழுத்தித் துடைத்த போது அதைத் தொட்டு நின்ற அவளது முழு வளர்ச்சிப்பெற்ற மார்பகங்களைத் தவிர, அவளிடம் பென்மைக்குரிய லட்சணம் வேறெதுவுமில்லை.
அவள் இதைச் செய்துகொண்டிருக்கையில், அறையிலிருந்த ஒரே ஒரு பிரம்பு நாற்காலியில் தன் தந்தையை அமரச் செய்துகொண்டிருந்தாள் ஈஸு. நாற்காலியின் நடுப்பகுதி தொய்ந்து இருந் தது. ஒரு பக்கம் ஒடிந்திருந்தது. நடையின் கார ணமாக முற்றிலும் சோர்ந்து, போயிருந்தான் டுவான்,