400
ஸ்வாட்டின் கண் இமைகள் மெள்ளத் திறக்க ஆரம்பித்தன; அவள் கண்கள் ஒரு நிலைப்பட்டன. அவள் நெடுமூச்செறிந்தாள்.
"ஸ்வாட், நீங்கள் நல்லபடியாக இருக்கிறீர்க ளல்லவா?”
"நான் எங்கே இருக்கிறேன்." "நாங்கள் உங்களுடன் இருக்கிருேம். நீங்கள் செங்குத்துப் பாறையிலிருந்து விழுந்து விட்டீர்கள்." 'ஓ, தெய்வமே! நாங்கள் அவ்வளவு கீழேயா விழுந்துவிட்டோம்?....குழந்தை ஸ்ப்ரெளட் எங்கே?" சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவள் கேட்டாள். அப் போதும் அவளது கலக்கம் தெரியவில்லை.
தன் பேரனைக் கையால் பற்றியவண்ணமிருந்த தாத்தா டுவான அவள் திடுதிப்பென்று பார்த்தாள்; அவனைச் சிரமத்தோடு நோக்கி, “நீ நல்லபடியாக இருக்கிருய் அல்லவா?’ என்று கேட்டாள்.
'அவன் நல்லபடியாகவே இருக்கிருன்!” என்று பதிலளித்தான் டுவான். -
"எல்லாம் புத்தரின் கருணைதான்! புத்தர்பிரான் புகழப்படட்டும்...நாங்கள் அத்துணை பயங்கரமாக விழுந்துவிட்டிருந்தோம்!...” என்று அவள் சொன் ள்ை. அப்போது அவள் கண்கள் கணநேரத்துக்கு மூடிக்கொண்டன; அவள் உடல் நடுங்கியது.
ஈஸ் உடனே அவளைத் தாங்கிக்கொண்டாள்; பிறகு சுத்தமான கைக்குட்டையால் அவள் முகத்தை ஒரளவு சுத்தம் செய்ய முயன்ருள்; அவளது கன்னத்திலிருந்த நீண்ட வெட்டுக் காயத்தினின்றும் ரத்தம் கசியத் தொடங்கிற்று.