404
இருந்தால், நெடுஞ்சாலையிலிருந்து உங்களை யாரும் பார்க்க முடியாது. நான் போய்மற்றக் குழுவினரைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களையும் இங்கு கொண்டு வந்து சேர்க்கிறேன்” என்று கூறினன் சைசாம்,
சைசாம் போனபின், அவர்கள் ஒவ்வொருவரும் அமைதியிழந்தனர். பாதுகாப்பு இல்லாமல், இப் புதிய குன்றுப் பகுதியில் தங்களை அனதரவாக கை விட்டு விட்டதைப்போல் உணர்ந்தனர். காலையில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்ட லெய்வாகூட கலக்கமடைந்து நம்பிக்கை இழந்தது போல உணர லாளுள். எதற்கும் கலங்காத ஒரே நபர் ஃபான்தான். அவன் எப்போதும் எதிர்நோக்கி நிற்கும் அடுத்த நாளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். இதுதான் அவர்களது கடைசி நாளாக நெருக்கடி நிறைந்த நாளாக இருக்குமென்று தோன்றியது. அசம்பாவிதமாக எதுவும் நேரிடக் கூடாதென்று அவன் விரும்பினன். சைசாம் எப்படி ஜேம்ஸைத் தேடிக் கண்டுபிடிக்கப்போகிருன், அவனுல் ஜேம்ஸை கண்டு பிடிக்க முடியுமா? என்றெல்லாம் அவன் கவலைப்பட்டான். இங்கே பார்த்தான்:-டுவான் நடுங்கிக் கொண்டு இருந்தது பரிதாபகரமாக இருந்தது: ஸ்வாட், ஸ்ப்ரெளட் ஆகியோரின் துணிகள் ஈரத்தினுல் அவர்களின் உடம்புகளில் ஒட்டிக்கொண்டு கிழிந்து தொங்கின. அவர்கள் குளிர் காய அவன் காய்ந்த விறகு கொண்டு வரவேண்டும். ஃபான் புறப்பட்டான்.
செடிகளையும் முட்புதர்களையும் விலக்கிக் கொண்டு அவற்றின் ஊடே விரைந்து சென்ற அவன்