இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்புவழி
மக்களெலாம் தேவர்களாய்
- மாறவொரு வழியுண்டு
மனம் படைத்த பெரும்பயனும்
- மனிதனுக்கு வாய்த்திடுமாம்;
தக்கபடி மனம் மலரத்
- தந்திரமும் நாமறிந்தால்
தாரணியை விண்ணடாய்ச்
- கமைத்திடீலாம் ஐயமில்லை
மனம் என்னும் பெருங்கரங்கு
- மாயத்தின் பெருஞ்சுழ்ச்சி
வாழ்வெல்லாம் தந்திடவும்
- தாழ்வெல்லாம் சூழ்த்திடவும்
கணத்தினிலே சொர்க்கமதும்
- கணத்தினிலே பாழ்நரகும்
காட்டவல்ல மனக்குரங்கு
- கடவுளின் பெருங்கொடையாம்
மாயமனக் குகையினிலே
- மச்சுண்டு;மேல்மாடி
வாழ்ந்திருப்போர் தேவர்களை
- மற்றந்தக் கீழ் நிலையில்
தாயநியா விலங்கினங்கள்
- தலையில்லாப் பெரும்பேய்கள்
தாழ்வளிக்கும் உணர்ச்சியெலாம்
- தங்கியுறை பெருநகரம்{{rh||99|}