பக்கம்:இளந்தமிழா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு வழி இறகுபெற்ற சிற்றெறும்பு எழுந்துபறந் தெரிதீயில் விழுந்தழிந்து மாய்வதுபோல் வித்தையினால் மாய்ந்திடவோ? விலங்குணர்ச்சி மாய்க்காமல் வெற்றிபல பேசியென்ன? வெளியியற்கை வெற்றியெலாம் மெய்வெற்றி யாகாது. உலகெங்கும் ஒருசேர ஒழிக்கவல்ல படைகண்டோம்: ஒழிந்திடவோ மக்களினம் உயரத்தான் செய்வோமோ? நெருக்கடியிந் நிலையினிலே நீசமனப் புன்மையெலாம் நீங்கிடவே நல்லறிவால் நெறி வளர்த்து மனம்விரிய உருத்தெழுந்து நிற்போமோ? உடல்வளர்ச்சி யோர் நிலையில் ஓய்ந்துமெல்ல நலிவதுபோல் உள்ளம் நலிந்திடுமோ? புல்லாகி மரமாகிப் புழுபறவை விலங்காகிப் புத்தி மனவாற்றல் மிகும் மனிதனாய் வந்தவுடன் நில்லாமற் பரிணாமம் நாம் வளர்க்க மாட்டோமோ? மனமிதற்கு வலியிலையோ? வளரத்தான் மாட்டாதோ? 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/103&oldid=1361106" இலிருந்து மீள்விக்கப்பட்டது