பக்கம்:இளந்தமிழா.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு வழி இத்தரையில் வந்தவர்கள் இம்மனமும் அன்பினிலே எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணும்வகை காட்டு வித்தார்; வன்மையுண்டு மனத்திற்கும் மலர்ந்ததுவும் ஓங்கிவிடும்: எழுந்திரடா புறவெற்றி போதும்: இனி அகவெற்றி நாடிடுவாய்; மென்மை உணர்ச்சி யெலாம் மேலோங்கச் செய்திடுவாய்; விண்ணொளியால் குகையிருட்டை விழுங்கிடவே செய்திடுவாய்: அன்பினிலே மனம்மலர அமரனைப்போல் வாழ்ந்திடுவாய்: இன்பம் பெருகி யெங்கும் எவ்வுயிரும் மகிழ்ந்திடவே அன்புவழி அன்புநிலை அன்புச் சிவமாவாய் அன்புவழி யோங்கிவிட்டால் அமரநிலை வந்திடுமே. 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/105&oldid=1361117" இலிருந்து மீள்விக்கப்பட்டது