பெலால் சென்
முந்திவந்த பகைவரை வேலால்–பெலால்
மோதியுயி ருண்டுவரு வானுல்.
செத்தவர்கள் கணக்கில்லே யன்று-வளர்
தீரனவன் களங்கொண்டான் வென்று.
கத்துகுயில் மொழியாளைக் காண-அவன்
கடுகிவந்தான் காற்றுவேகம் நாண.
சூரியனும் மேற்றிசையில் வந்து-எங்கும்
சூழுமிருள் கண்டனன் சிவந்து:
ஆரியனும் மல்லகதி பறந்தான்-களிப்பில்
அங்கையிற் புருவின்பிடி மறந்தான்.
விண்ணிலது படபடத்து நேரே-ஒரே
வேகமதாய்ச் சென்றதவன் ஊரே.
வண்ணப்பரி தட்டிவிட்டான் உள்ளம்-சால
வதவதக்கத் தாண்டும்மேடும் பள்ளம்.
கோட்டைதனில் நுழைகின்ற போதே-அங்குக்
கொழுந்துவிட்ட தீகண்டான் தீதே;
மீட்டுவந்த வெண்புறவு கண்டு-அந்தோ
வீழ்ந்துவிட்டான் நாதனெனக் கொண்டு
தீக்குளித்தாள் கற்பரசி நொந்தே-அந்தத்
தீரனும் துடித்தான் உளம் வெந்தே.
தேக்கறியும் எரியினிடைச் சென்ருன்-"என்றன்
தேனேவந்தேன் உன்னுடன்நான்" என்றான்.
108