பக்கம்:இளந்தமிழா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தியாகம் பல ஆண்டுகளாக நாட்டிலே மழை பெய்யவில்லை. குடிக்கக் கூடத் தண்ணிர் அற்றுப்போய் விட்டது. மக்த ளெல்லாம் வாடினர். அவர்களுடைய துன்பங் கண்டு ஆரசன் உள்ளம் பதைத்தான். குடிதண்ணிருக்காவது வகை செய்ய வேண்டு மென்று பெரி. கிண்ருென்று வெட்டினன். எவ்வளவு ஆழம் வெட்டியும் கிணற்றில் ஊற்றே வரவில்லை. அரசனு டைய வருத்தம் கரைகடந்துவிட்டது. அந்த நிலையிலே பாட்டு ്தொடங்குகிறது. இப்பாடல் அஸ்ஸாமியைக் கதை பொன்றைத் தழுவி உருவாகியுள்ளது. "மாரி பொழிய வில்லை-வெட்டும் மாபெருங் கேணியிலும் நீரினைக் காணே னந்தோ-என்றன் நெஞ்சங் குமுறு கின்றேன். நீதி தவறினனே-ஆன்றி நேர்மை குலைந்தே னே? ஏது பிழை யறியேன்-மக்கள் இடரில் அழுந்தினரே." என்றெண்ணி மன்னவனும்-துயர் ஏறி உறங்கிடும் கால் கண்ட கொடுங் கனவை- அவன் காதலிக்கே யுரைப் பான்; "நாகினி தேவிக்குன-பலி நல்கிடின் நீர் பெருகி வேகமாய் ஊறிடுமாம்-இது விண்ணவர் தம் முடிவாம்.'

    ‌‌      1‌‌09
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/111&oldid=1360573" இலிருந்து மீள்விக்கப்பட்டது