பக்கம்:இளந்தமிழா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீரன்குமரன்

"என்னை அடித்த அடியெலாம்-பாரத

     அன்னை விலங்கை உடைத்தன;

முன்னைப் புகழ்அவள் எய்துவாள்-இறுதி

    மூச்சில் இதைநானுங் கூறினேன்.


ஜயஜய பாரதம்" என்றனன்-அந்தத்

     தாயும் மடியினில் ஏற்றனள்;

"ஜயஜய"என்றனர் யாவரும்-குமரன்

     சத்தியம் போல்புகழ் தாங்கினன்.

麗麗鬱

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/117&oldid=1359426" இலிருந்து மீள்விக்கப்பட்டது