இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10 சுண்டுவாதத்தால் அல்லலுறுகிறது தூரனுடைய உடம்பு.ஆளுல்,வெறும் உடம்பா தூரன்?இல்லை.வேதனை தருகின்ற வாதத்தைத் துணிச்சலோடு புறக்கணித்து விட்டு,கவிதைசெய்யும் ஆனந்த ரஸவாதத்தில் ஈடுபட்டுத் துள்ளிவிளையாடுகிறது துாரனுடைய உள்ளம். இதோ ஒரு பாடல்:-
ஆடியெழும் நாகமதை அடிமிதிக்கும் பருவம் அளவில்லா உயர் எண்ணம் அனல்வீசும் பருவம் தேடறிய கலையெல்லாம் நாடுகின்ற பருவம் தீஞ்சுவைசேர் கவிக்கனலில் சிறந்திருக்கும் பருவம்
இடையூறு என்ற சொல்லே கவி தூரனுடைய கற்பனை அகராதியில் கிடையாது.மேலும் சொல்லுகிறார் :-
எண்ணிலா இடையூற்றை எதிர்த்தேகும் பருவம் எட்டாத கொம்பெனினும் ஏற எழும் பருவம் வெற்றியெலாம் பற்றிக்கை வீசுகின்ற பருவம் விண்ணாடாய் உலகாக்க விரும்புகின்ற பருவம்
கிழவர்களுக்கே இளமையூட்டும் வீறுகொண்ட பாடல்கள் இவை.
இனி, காதலைப்பற்றிச் சில பாடல்கள். கருக்கரிவாள் கையிலேந்தி,கழனிசெல்லுகிருள் ஒரு மங்கை.அவளுடைய