பக்கம்:இளந்தமிழா.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழவியும் ராணாவும்

"என்றன் ராணாப்ர தாபனோ பேசுவோன் -
இந்தச் சொல்லையச் சிங்கமும் சொல்லுமோ?
நின்ற வீரமும் ஆண்மையும் இற்றைநாள்
நீணி லத்தைவிட் டேகியதோ? வென்றாள்.

"மான மின்றி ரஜபுத்ர மன்னர்கள்
மண்டி யிட்டுப் பணிந்தனர் அக்பரை;
மான சிங்கனும் மைத்துனன் என்றனன்;
மாட்சி கெட்டது நம்மனோர் நல்லினம்.

"சொந்தத் தம்பியின் சொல்லைப் பொறுக்கிலார்"
சோரம் செய்யும் அயலனைச் சூழ்கிறார்;
தந்தை நாட்டினை விற்றுப் பிழைக்கிறார்;
தாச ராகக்கை கட்டி உழைக்கிறார்.

"துணைவ ரின்றிப் பலபல சண்டைகள்
தோற்ற தாலென் றன்வீரரும் சோர்ந்தனர்;
பிணியில் நொந்தனர்; பசியினில் மாழ்கினர்;
பேசுங் கோட்டைச்சித் துாரும் இழந்திட்டேன்.

“ஆர வல்லியக் குன்றில் அலைந்தனம் -
அரிய போர்பல செய்து முயன்றனம்;
சூர தீரங்கள் காட்டினோம் ஆயினும்
தோல்வியேயினிச் சமரெனக் கென்ன சொல்?"

"பார தத்தினைக் காத்திட நம்மிடைப்
பலரும் போற்றும்நீர் உண்டென நம்பினேன்;
போரெ டுத்தநற் போதெலாம் மைந்தரைப்
போக வென்றுநான் வாழ்த்தி அனுப்பினேன்.


118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/120&oldid=1361664" இலிருந்து மீள்விக்கப்பட்டது