இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12 தூரனின் பரிவும், இரக்கமும் நம் உள்ளத்தைத் தொட்டுக் கனியவைக்கின்றன.
வறுமை மண்டிக்கிடக்கும் பாழுங் குடிசை;அதில் வாழும் ஒரு சிறுவனும் சிறுமியும் விளையாடுகிருர்கள். குடிசை எப்படி இருக்கிறது? உப்புப் பொரிந்து உதிரும் உவர்மண், இடிந்தசுவர்! தப்பி கிமிர்ந்தெழுந்தால் தலையிடிக்கும் தாழ்கூரை.
பக்கத்தில் விளையாடுகிருன் ஒரு பாலகன். அதனை வருணிக்கிருர் கவிஞர்:
கந்தலொரு கோவணமே கண்டவுடல்; மற்றும் அனல் சிந்தும் வெயில், கடுங்குளிரே சிறுவனுக்கு மேற்போர்வை.
அவன் கூவியழைக்க ஒரு சிறுமி ஒடி வருகிருள். அவள் வந்த வரிசை எப்படி இருக்கிறது?
கந்தல் அவன் ஆடை கன்னிக்கு அதுவுமில்லை இந்த உலகில் வந்த இயல் வடிவாய்க் - காட்சிதந்தாள்.
இருவரும் கூடி விளையாடுகிருர்கள். எளிய விளையாட்டு அது. மரக்குதிரையோ பொம்மைக் காரோ அவர்களுக் கேது?
அன்புடனே கூடி அவர் அரிதாக மண் சேர்த்துச் சின்னச் சுவர் எழுப்பிச் சிற்றில்ல மாக்கியதில்