பக்கம்:இளந்தமிழா.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழந்தை விளையாட்டு

கந்தல் அவன் ஆடை,

 கன்னிக் கதுவு மில்லை;

இந்த உலகில் வந்த

 இயல் வடிவாய்க் காட்சி தந்தாள்-

அன்புடனே கூடி அவர்

 அரிதாக மண் சேர்த்துச்

சின்னச் சுவர் எழுப்பிச்

 சிற்றில்ல மாக்கி யதில்

பனங் கொட்டை யொருநான்கு,

 பாதையிலே கண்டெடுத்த

கனங் கெட்ட லாடமொன்று,

 கண்ணாடித் துண்டிரண்டு,

ஓடையிலே போயெடுத்த

 உருண்டைக்கல் லிருமூன்று,

டொன்று கூழ் காய்ச்ச -

 ஒரு குடும்பம் செய்கின்றார்!

மண்ணிலே வீடெடுத்து,

 வாழ்க்கையையே விளையாடி, என்னென்ன இன்பங்கள்
 இளங்குஞ்சு கண்டாரோ!

பச்சை மனங் கட்டிவைத்த

 பைஞ்சோலை சூழ்மாடம்: இச்சையெலாம் ஏவு முன்பே,
 இனிது செயும் ஏந்திழைகள்:
            
          20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/22&oldid=1359750" இலிருந்து மீள்விக்கப்பட்டது